உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உடுமலையில் வாலிபர் மீது சரமாரி தாக்குதல்

Published On 2022-05-05 08:17 GMT   |   Update On 2022-05-05 08:17 GMT
ஏரிப்பாளையம் கலைஞர் நகர் அருகே வந்தபோது திடீரென்று பிரவீன்குமாரை வழிமறித்த காரிலிருந்து இறங்கிய 3 பேர் கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர்.
உடுமலை:

சூலூர் தாலுகா சாலைப்புதூரைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் பிரவீன்குமார்(வயது 23). சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார்.இவருக்கு உடுமலையைச் சேர்ந்த சரத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று அவரைப் பார்ப்பதற்காக குடிமங்கலத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் உடுமலை நோக்கி வந்துள்ளார். அவருக்குப் பின்னால் காரில் மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர். ஏரிப்பாளையம் கலைஞர் நகர் அருகே வந்தபோது திடீரென்று பிரவீன்குமாரை வழிமறித்த காரிலிருந்து இறங்கிய 3 பேர் கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த பிரவீன்குமார் அருகிலுள்ள வீட்டுக்குள் ஓடி கதவைச் சாத்தியுள்ளார். அவரைப் பின் தொடர்ந்த மர்ம நபர்கள் பிரவீன்குமாரை வெளியே வருமாறு மிரட்டியுள்ளனர். போலீசை கூப்பிடுங்கள் என்று பிரவீன்குமார் கூச்சலிட்டவுடன் மர்ம நபர்கள் காரில் ஏறி தப்பி ஓடியுள்ளனர்.

மர்ம நபர்களின் கொலைவெறித் தாக்குதலில் பலத்த காயமடைந்த பிரவீன்குமார் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் இதுகுறித்து பிரவீன்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த உடுமலை போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் மற்றும் காரிலிருந்து ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News