உள்ளூர் செய்திகள்
விபத்துக்குள்ளான கார்.

கோவிலில் உள்ள சாமி சிலைகள் மீது கார் மோதல்- பெண் பலி

Published On 2022-05-03 10:47 GMT   |   Update On 2022-05-03 10:47 GMT
ஆம்பூர் அருகே கோவிலில் உள்ள சாமி சிலைகள் மீது கார் மோதி– பெண் பலியானார்.
ஆம்பூர்:

ஆம்பூர் அருகே வீரவர்கோவில் என்ற இடத்தில் இன்று காலை 9 மணிக்கு வேலூர் இருந்து ஆம்பூருக்கு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது தீடிரென கார் கோவில் உள்ள பகுதியில் புகுந்து சாமி சிலைகள் மீது மோதியது. இதில் காரில் இருந்த  ஒரு பெண் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 

படுகாயமடைந்த 2 சிறுவர்கள் மற்றும் ஒருவர் உள்பட 3 பேர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News