உள்ளூர் செய்திகள்
கோவிலில் உள்ள சாமி சிலைகள் மீது கார் மோதல்- பெண் பலி
ஆம்பூர் அருகே கோவிலில் உள்ள சாமி சிலைகள் மீது கார் மோதி– பெண் பலியானார்.
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே வீரவர்கோவில் என்ற இடத்தில் இன்று காலை 9 மணிக்கு வேலூர் இருந்து ஆம்பூருக்கு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அப்போது தீடிரென கார் கோவில் உள்ள பகுதியில் புகுந்து சாமி சிலைகள் மீது மோதியது. இதில் காரில் இருந்த ஒரு பெண் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
படுகாயமடைந்த 2 சிறுவர்கள் மற்றும் ஒருவர் உள்பட 3 பேர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.