உள்ளூர் செய்திகள்
கருடசேவை புறப்பாட்டில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் வீதி உலா

பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம்

Published On 2022-05-03 10:03 GMT   |   Update On 2022-05-03 10:03 GMT
தஞ்சை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது
தஞ்சாவூர்:

தஞ்சை மகர்நோன்பு சாவடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் 96-ம் ஆண்டு சித்திரை சிறப்பு திருவிழா இன்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு பெருமாள் கருட சேவை புறப்பாடு நடைபெற்றது. பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவில் 5-ந் தேதி வெண்ணைத்தாழி புறப்பாடு, 8-ந் தேதி திருக்கல்யாண வைபவம், இரவு சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து 9 ஆம் தேதி வசந்த உற்சவம் இரவு புறப்பாடு, 11-ந் தேதி ராஜகோபால சுவாமி புறப்பாடு, 13-ந் தேதி அனுமந்த வாகனம் இரவு புறப்பாடு, 15-ந் தேதி குதிரை வாகனம் இரவு புறப்பாடு நடைபெற உள்ளது. 18-ந் தேதி விடையாற்றி விழாவுடன் விழா நிறைவடைய உள்ளது.

Tags:    

Similar News