உள்ளூர் செய்திகள்
பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.

பேரூராட்சி கூட்டம்

Published On 2022-04-30 09:49 GMT   |   Update On 2022-04-30 09:49 GMT
திருக்காட்டுபள்ளி பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற பெருந்தலைவர் மெய்யழகன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார்.

 பேரூராட்சி துணை தலைவர் ரமணி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

இதில் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி கூட நாணல் பகுதியில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு போதிய கழிவுநீர் வடிகால் வசதி செய்து தர கேட்டுக்கொள்வது, 

2022- 23 ஆம் நிதியாண்டில் நபார்டு நிதி உதவி திட்டத்தில் பழமார்நேரி சாலை முதல் அய்யனார் வெட்டிப்பாதை வரை உள்ள 2.50 கிலோ மீட்டர் நீளமுள்ள கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு செய்யகேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்தின் இறுதியில் நியமன குழு உறுப்பினர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

 முன்னதாக தஞ்சை அருகே உள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்பவனியின் போது உயிரிழந்த 11 பேருக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Tags:    

Similar News