உள்ளூர் செய்திகள்
குமாரபாளையத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
குமாரபாளையம் பகுதியில் வசிக்கும் பிளஸ்-1 படிக்கும் மாணவிக்கு குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் பகுதியில் வசிக்கும் பிளஸ்-1 படிக்கும் மாணவிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக சைல்டுலைனுக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி சைல்டு லைன் அலுவலர் அருள்ராணி, வி.ஏ.ஒ. செந்தில்குமார் இருவரும் நேரில் சென்று மாணவியின் பெற்றோரை சந்தித்து, திருமண வயது 18 ஆகாத நிலையில் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம்.
உரிய வயது வந்ததும் திருமண ஏற்பாடுகள் செய்யலாம் எனவும், தொடர்ந்து இன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு மாணவியை அழைத்து வரும்படி அறிவுறித்தியுள்ளனர்.
இது குறித்து சைல்டு லைன் மற்றும் குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.