உள்ளூர் செய்திகள்
.

குமாரபாளையத்தில் 1000 கிலோ ரேசன் அரிசி கடத்திய 3 பேர் கைது

Published On 2022-04-29 08:16 GMT   |   Update On 2022-04-29 08:16 GMT
குமாரபாளையத்தில் 1000 கிலோ ரேசன் அரிசி கடத்திய 3 பேர் கைது ஆம்னி வேன் பறிமுதல் செய்தனர்.
குமாரபாளையம்:

குமாரபாளையம் பகுதியில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வட்ட வழங்கல் அலுவலர் வசந்தி மற்றும் வருவாய் வழங்கல் ஆய்வாளர் பிரவீன் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்தபோது   போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்இன்ஸ்பெக்டர் மலர்விழி ஆகியோருடன் நேரில் சென்று, வாரச்சந்தை பின்புற பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது ஆம்னி வேனுடன் ரேசன் அரிசி கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து வானியை சேர்ந்த செல்வம்(வயது 31), சாமியம்பாளையத்தை சேர்ந்த விமல், (30), கமல் (29) ஆகிய 3 பேரை கைது செய்தனர். 

மேலும் ஆம்னி வேன் மற்றும் அதிலிருந்த 50 கிலோ எடை கொண்ட 20 அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News