உள்ளூர் செய்திகள்
ஓட்டப்பிடாரம் அருகே மாயமான கல்லூரி மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு
ஓட்டப்பிடாரம் அருகே மாயமான கல்லூரி மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
புதியம்புத்தூர்:
ஓட்டப்பிடாரம் அருகே வடக்கு ஆரைக்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுக பாண்டி. இவரது மகள் மாரீஸ்வரி (வயது 19). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வந்தார் .
இவர் வீட்டில் இருக்கும் நேரங்களில் செல்போனை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதையடுத்து கடந்த 25-ந் தேதி மாரீஸ்வரி திடீரென மாயமானார். அக்கம், பக்கம் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்நிலையில் வடக்கு ஆரைக்குளம் கிராமத்தில் உள்ள கிணற்றில் மாரீஸ்வரி இறந்து கிடந்தார். இதையறிந்த போலீசார் மாரீஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் எப்படி இறந்தார் என பசுவந்தனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.