உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

தூத்துக்குடியில் இன்று ரெயிலில் அடிபட்டு இளம்பெண் பலி

Published On 2022-04-25 09:30 GMT   |   Update On 2022-04-25 09:30 GMT
தூத்துக்குடியில் இன்று ரெயிலில் அடிபட்டு இளம்பெண் ஒருவர் பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு பயணிகள் ரெயில் இன்று காலை 9 மணிக்கு புறப்பட்டது. 4-ம் கேட் அருகில் இந்த ரெயில் வந்து கொண்டிருந்த போது இளம்பெண் ஒருவர் திடீரென ரெயிலில் அடிபட்டு பலியானார். 

இதில் அவரது, தலை துண்டாகியும் உடல் சிதறியும் உயிரிழந்தார். அவர் தண்டவாளத்தை கடந்த போது அடிபட்டு இறந்தாரா அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News