உள்ளூர் செய்திகள்
நரிக்குடி அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது
காரியாபட்டி
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம் செம்பொன் நெருஞ்சி கிராமத்தில் அரியநாச்சி, அய்யனார், கருப்பசாமி கோவில் பொங்கல் திருவிழாவினை இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட 700க்கு மேற்பட்ட காளைகளை கால்நடைத்துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் வீரத்துடன் அடக்கி பிடித்தனர். வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு குத்து விளக்கு, மிக்சி, குக்கர், பீரோ போன்ற பரிசுகள் வழங் கப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டு விழாவில் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ கல்யாணகுமார், திருச்சுழி டி.எஸ்.பி. மதியழகன், அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. சகாயஜோஸ் திருச்சுழி தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.