உள்ளூர் செய்திகள்
கைது

மாநில கல்லூரி அருகே தொழிலாளியிடம் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 3 பேர் கைது

Published On 2022-04-20 09:09 GMT   |   Update On 2022-04-20 09:09 GMT
மாநில கல்லூரி அருகே தொழிலாளியிடம் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். தொழிலாளி. இவர் மாநிலக்கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் சரவணனிடம் இருந்த செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர். 
இதுகுறித்து அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார், வண்ணாரப் பேட்டையை சேர்ந்த17 வயது சிறுவன், மற்றும் மோகன்ராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதில் சிறுவன் மற்றும் மோகன் ராஜ் மீது ஏற்கனவே மோட்டார்சைக்கிள் திருட்டு, செல்போன் பறிப்பு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News