உள்ளூர் செய்திகள்
ஆசிரியர் தகுதி தேர்வு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான காலக்கெடுவை நீட்டித்தது தேர்வு வாரியம்

Published On 2022-04-18 07:47 GMT   |   Update On 2022-04-18 07:47 GMT
தேர்வை பொறுத்தவரையில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, தாள்-2 என்ற அடிப்படையில் நடைபெற உள்ளது.
சென்னை:

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) சமீபத்தில் 2022-ம் ஆண்டுக்கான அட்டவணையை வெளியிட்டது. அதில் ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கும் என று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருக்கிறது.

இதற்கிடையே, ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மார்ச் 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 13-ம் தேதி என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தேர்வை பொறுத்தவரையில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, தாள்-2 என்ற அடிப்படையில் நடைபெற உள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு http://www.trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

Tags:    

Similar News