உள்ளூர் செய்திகள்
நெல்லை பழைய பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தென்காசி வாலிபர் இசக்கிராஜ் விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் வடகரையை சேர்ந்தவர் குணசேகர். இவரது மகன் இசக்கிராஜ் (வயது25). இவர் தனது தந்தையுடன் வாழைக்காய் வியாபாரம் செய்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(26). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு 2 பேரும் திருச்செந்தூர் செல்வதற்-காக முடிவு செய்துள்ளனர்.
இதற்காக ராஜேந்திரனின் மோட்டார் சைக்கிளில் நள்ளிரவில் புறப்பட்டு சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை ராஜேந்திரன் ஓட்டிச்சென்றுள்ளார்.
நெல்லை பழைய பேட்டை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் 2 பேரும் சாலையில் சரிந்து விழுந்தனர்.
இந்த விபத்தில் ராஜேந்திரனுக்கு வலது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இசக்கிராஜின் வலது கால் முறிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரையும் மீட்டனர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
தென்காசி மாவட்டம் வடகரையை சேர்ந்தவர் குணசேகர். இவரது மகன் இசக்கிராஜ் (வயது25). இவர் தனது தந்தையுடன் வாழைக்காய் வியாபாரம் செய்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(26). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு 2 பேரும் திருச்செந்தூர் செல்வதற்-காக முடிவு செய்துள்ளனர்.
இதற்காக ராஜேந்திரனின் மோட்டார் சைக்கிளில் நள்ளிரவில் புறப்பட்டு சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை ராஜேந்திரன் ஓட்டிச்சென்றுள்ளார்.
நெல்லை பழைய பேட்டை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் 2 பேரும் சாலையில் சரிந்து விழுந்தனர்.
இந்த விபத்தில் ராஜேந்திரனுக்கு வலது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இசக்கிராஜின் வலது கால் முறிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரையும் மீட்டனர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.