உள்ளூர் செய்திகள்
தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

அம்பேத்கர் பிறந்தநாள் விழா

Published On 2022-04-14 09:50 GMT   |   Update On 2022-04-14 12:15 GMT
மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் சமத்துவநாள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
திருப்பூர்:
 
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் சமத்துவநாள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல்அமீது உள்பட பலர் கலந்து கொண்டனர். 

திருப்பூர் காமராஜர் ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு சிவசேனா கட்சி சார்பில் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி திருப்பூர் காமராஜர் ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.நாகராஜ், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News