உள்ளூர் செய்திகள்
.

உழவர் சந்தையில் ரூ.7.38 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

Published On 2022-04-11 09:22 GMT   |   Update On 2022-04-11 09:22 GMT
நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று காய்கறி மற்றும் பழங்கள் ரூ.7.38 லட்சத்துக்கு விற்பனையானது.
நாமக்கல்:

நாமக்கல்லில் கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைவிக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் இங்கு காய்கறி விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். 

அந்த வகையில் நேற்று காய்கறிகள் மற்றும்  பழங்கள்  ரூ.7 லட்சத்து 38 ஆயிரத்து 420க்கு விற்பனை செய்யப்பட்டது. இவற்றை 5 ஆயிரத்து 270 பேர் வாங்கி சென்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.16-க்கும், கத்தரி கிலோ ரூ.28-க்கும்,  புடலங்காய் கிலோ ரூ.44-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.48-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.24-க்கும், கேரட் கிலோ ரூ.60-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.48-க்கும், முட்டைக்கோஸ் கிலோ ரூ.20-க்கும், இஞ்சி கிலோ ரூ.45-க்கும் விற்பனை செய்யப்பட்டன. சின்ன வெங்காயம் கிலோ ரூ.18-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.22-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

காய்கறிகளின் வரத்து சற்று குறைவாக இருந்ததால், அவற்றின் விலை உயர்ந்து காணப்பட்டதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.8க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று கிலோ ரூ.16க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News