உள்ளூர் செய்திகள்
ரெயில் நிலைய மேலாளர் முருகேசனிடம் கவுன்சிலர்கள் ஆமீனா சாதிக், ரம்ஜான் அலி ஆகியோர் மனு அளித்த காட்சி.

மேலப்பாளையம் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நின்று செல்ல கோரிக்கை

Published On 2022-04-10 10:11 GMT   |   Update On 2022-04-10 10:11 GMT
மேலப்பாளையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி சந்திப்பு ரெயில் நிலைய மேலாளரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
நெல்லை:

மேலப்பாளையம் மண்டலம் 48-&வது வார்டு கவுன்சிலர் ஆமினா சாதிக் மற்றும் கவுன்சிலர்கள் நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் முருகேசனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
 
மேலப்பாளையம் ரெயில் நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை பயணிகள் ரெயிலும், ஓரிரு எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று சென்றன. கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நிற்பதில்லை.

இப்போது நெல்லை-&நாகர்கோவில் வழித்தடத்தில் அனைத்து ரெயில்களும் இயக்கப்படும் நிலையில் மேலப்பாளையம் ரெயில் நிலையத்தில் ஒரு ரெயிலும் நின்று செல்வதில்லை.

எனவே மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள பொது-மக்கள் பயன்பெறும் வகையில் நெல்லை-நாகர்கோவில், நாகர்கோவில்-கோவை உள்ளிட்ட ரெயில்கள் மேலப்பாளையம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அப்போது கவுன்சிலர் ரம்ஜான் அலி, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ஆசாத் பாதுஷா, திமுக இளைஞரணி மேலப்பாளையம் அமைப்பாளர் சாலி மவுலானா மற்றும் பலர் உடன் சென்றனர்.
Tags:    

Similar News