உள்ளூர் செய்திகள்
பெட்ரோல் பங்க் (கோப்பு படம்)

இரண்டு நாட்களாக விலை மாற்றம் இன்றி பெட்ரோல், டீசல் விற்பனை

Published On 2022-04-08 01:22 GMT   |   Update On 2022-04-08 01:22 GMT
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன. 

137 நாட்களுக்கு பிறகு கடந்த மாதம் 22ம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

ரஷியா-உக்ரைன் போர் காரணமாக எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பால் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில்  எரிபொருள் விலை 51 சதவீதத்தை தாண்டி உயர்ந்துள்ளதாகவும், ஆனால் இந்தியாவில் 5 சதவீதமாகவே எரிபொருள் விலை உயர்வு இருப்பதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்தது.

இந்நிலையில்  சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக  ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இன்று காலையும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.  நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News