உள்ளூர் செய்திகள்
14 நாட்களில் 12வது தடவையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
சென்னை:
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன.
137 நாட்களுக்கு பிறகு கடந்த மாதம் 22ம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இன்றுடன் சேர்த்து கடந்த 14 நாட்களில் 12 வது தடவையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப் பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 38 காசுகள் உயர்த்தப்பட்டு, 109 ரூபாய் 34 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் 38 காசுகள் உயர்த்தப்பட்டு 99 ரூபாய் 42 காசுகளுக்கு விற்பனையாகிறது.