உள்ளூர் செய்திகள்
சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ.58 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
பங்குனி மாத அமாவாசையையொட்டி சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ.58 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையாகின.
அன்னதானப்பட்டி:
பங்குனி மாத அமா வாசையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் ரூ. 58.056 லட்சத் திற்கு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை விற்பனை யாகின.
சேலம் மாவட்டத்தில் சேலம் சூரமங்கலம், தாதகாப் பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டை யாம்பட்டி ஆகிய 11 இடங் களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் வழக் கத்தை விட அமாவாசை நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம்.
அதன்படி, இன்று பங்குனி மாத அமாவாசையை யொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது. முன்னோர்களுக்கு தர்ப் பணம் கொடுக்கவும், வீடுகளில் சாமிக்கு படைய லிட்டு சமைப்பதற்காகவும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்ட வற்றை அதிகளவில் வாங்கி சென்றனர்.
பழங்கள், தேங்காய், வாழை இலை , கீரை வகைகள் , பூசணிக்காய் , காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆனது . இதே போல் , பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தை களிலும் இன்று 1000 விவசாயிகள், பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். காய்கறிகள், பழங்களின் மொத்த வரத்து 243.46 மெட்ரிக் டன் ஆகும். அவற்றை 52, 796 நுகர்வோர்கள் வாங்கிச் சென்றனர்.
இதன் மூலம் இன்று ஒரே நாளில் ரூ.58.056 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.