உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சிறுத்தை தாக்கி காயமடைந்த காவலாளிக்கு இழப்பீடு தொகை

Published On 2022-03-27 08:56 GMT   |   Update On 2022-03-27 08:56 GMT
சிறுத்தை பெருமாநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் சுற்றி திரிவதாக வந்த தகவலை அடுத்து வனத்துறையினர் அங்கு கண்காணிப்பு கேமராக்களை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் பாப்பாங்குளம் பகுதியில் இருந்து கடந்த ஜனவரி மாதம் தப்பிச்சென்ற சிறுத்தை பெருமாநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் சுற்றி திரிவதாக வந்த தகவலை அடுத்து வனத்துறையினர் அங்கு கண்காணிப்பு கேமராக்களை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் அந்த சிறுத்தை திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் வேஸ்ட் பொருட்கள் குடோனில் பதுங்கியிருந்து ராஜேந்திரன்( வயது 55) என்பவர் மீது பாய்ந்து தாக்கியது.இவரது அலறல் சத்தம் கேட்டு சென்ற பொதுமக்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர்.

மேலும் ராஜேந்திரனை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் சிகிச்சை முடிந்து மீண்டும் அதே நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில்  சிறுத்தை தாக்கி ராஜேந்திரனுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து அரசு வழங்கும் இழப்பீடுத் தொகையான ரூ.59,100 , ஆனைமலை புலிகள் காப்பக வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம்  உத்தரவின் பேரில், திருப்பூர் வனக் கோட்ட துணை இயக்குனர்  தேஜஸ்வி  அறிவுரையின் படி உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர்  கணேஷ் ராம் பாதிக்கப்பட்டவருக்கு காசோலையை வழங்கினார்.
Tags:    

Similar News