உள்ளூர் செய்திகள்
முதியவர் மயங்கி விழுந்து திடீர் சாவு
வேலூர் பஸ் நிலையத்தில் முதியவர் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
வேலூர்:
மயிலாடுதுறையை சேர்ந்தவர் 55 வயது முதியவர். இவர் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று வேலூர் வந்தார்.
சிகிச்சை முடிந்து ஊருக்கு செல்வதற்காக இன்று அதிகாலை 5 மணியளவில் பழைய பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றார்.
அப்போது முதியவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் முதியவருக்கு தண்ணீர் கொடுத்து எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் கை, கால்கள் அசைவு இன்றி இருந்தார்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரை சோதனை செய்தபோது அவர் இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.