உள்ளூர் செய்திகள்
ஓ.பி.எஸ். மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத்

ஓ.பி.எஸ். மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை

Published On 2022-01-28 12:57 GMT   |   Update On 2022-01-28 12:57 GMT
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவித்துள்ளது.
வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல் அளித்ததாக நீதிமன்றம் உத்தரவுப்படி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மிலானி என்பவர் தொடுத்த வழக்கில் தேனி மாவட்ட நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்த உத்தரவிட்டிருந்த நிலையில், போலீசார் கடந்த மாதம் 9-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் விசாரணைக்கு தடைவிதிக்க கோரி இருவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த தடைவிதித்துள்ளது.

மேலும், வழக்குப்பதிவுக்கு உத்தரவிட்டது தொடர்பாக காவல்துறை பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News