உள்ளூர் செய்திகள்
விழுப்புரம் அருகே குட்கா விற்பனை செய்த வியாபாரி கைது
விழுப்புரம் அருகே குட்கா விற்பனை செய்த வியாபாரியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 160 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா உத்தரவின்பேரில் மணல் கடத்தல் போதைப்பொருட்கள் கடத்தல் லாட்டரி சீட்டு கடத்தல் போன்றவைகளை தடுக்கும் நோக்கத்துடன் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஆனந்தனுக்கு வளவனூர் குமார குப்பம் பகுதியில் ஒரு பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காமற்றும் பான் வழக்குகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசார் வளவனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டகுமார குப்பம்பகுதிகளில் பெட்டிக் கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது .
அப்பொழுது மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய போதை ஊட்டக்கூடியதுமான குட்கா பொருட்கள் பதுக்கி இருப்பது சோதனையில் தெரியவந்தது.
அதனடிப்படையில் வளவனூர் குமாரகுப்பம் பகுதியை சேர்ந்த அப்துல் சலீம் என்பவரிடம் குட்கா பாக்கெட்டுகள் 160 கைப்பற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரை வளவனூர் போலீசார் கைது செய்தனர்
விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா உத்தரவின்பேரில் மணல் கடத்தல் போதைப்பொருட்கள் கடத்தல் லாட்டரி சீட்டு கடத்தல் போன்றவைகளை தடுக்கும் நோக்கத்துடன் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஆனந்தனுக்கு வளவனூர் குமார குப்பம் பகுதியில் ஒரு பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காமற்றும் பான் வழக்குகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசார் வளவனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டகுமார குப்பம்பகுதிகளில் பெட்டிக் கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது .
அப்பொழுது மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய போதை ஊட்டக்கூடியதுமான குட்கா பொருட்கள் பதுக்கி இருப்பது சோதனையில் தெரியவந்தது.
அதனடிப்படையில் வளவனூர் குமாரகுப்பம் பகுதியை சேர்ந்த அப்துல் சலீம் என்பவரிடம் குட்கா பாக்கெட்டுகள் 160 கைப்பற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரை வளவனூர் போலீசார் கைது செய்தனர்