உள்ளூர் செய்திகள்
முக்கூடல் கடையில் ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு
முக்கூடல் பகுதியில் உள்ள மரம் அறுக்கும் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் முக்கூடல் புதுக்கிராமத்தை சேர்ந்தவர் கண்ணாடிசேட் (வயது 48). இவர் முக்கூடல்-ஆலங்குளம் சாலையில் மரம் அறுக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
சம்வத்தன்று இரவு இவர் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு தூங்க சென்றார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல கடையை திறப்பதற்காக கண்ணாடிசேட் வந்தார்.
அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பித்தளை பொருட்கள் கொள்ளை போயிருந்தது.
இது தொடர்பாக அவர் முக்கூடல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் புதுக்கிராமத்தை சேர்ந்தவர் கண்ணாடிசேட் (வயது 48). இவர் முக்கூடல்-ஆலங்குளம் சாலையில் மரம் அறுக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
சம்வத்தன்று இரவு இவர் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு தூங்க சென்றார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல கடையை திறப்பதற்காக கண்ணாடிசேட் வந்தார்.
அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பித்தளை பொருட்கள் கொள்ளை போயிருந்தது.
இது தொடர்பாக அவர் முக்கூடல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.