உள்ளூர் செய்திகள்
குழந்தையை பார்க்க முடியாத ஏக்கத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை
கொரோனா அறிகுறியின் காரணமாக குழந்தையை பார்க்க முடியாத ஏக்கத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பொம்மஹள்ளியை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரது மனைவி சஞ்சீவ்வர்சனி (வயது26). இவர்களுக்கு திரு மணமாகி 1 அரை ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து 10 நாட்களாகிறது.
இந்த நிலையில் சஞ்சீவ்வர்சனிக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் வீட்டிலியே தனிமையில் இருந்து வந்துள்ளார். குழந்தையை பார்க்காமல் மனவேதனையில் இருந்த அவர் நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.