உள்ளூர் செய்திகள்
முதியவர் சாவு

கொரோனாவுக்கு முதியவர் சாவு

Published On 2022-01-25 10:50 GMT   |   Update On 2022-01-25 10:50 GMT
கொரோனா தாக்கியதால் முதியவர் இறந்தார்.
மதுரை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் பரிதாபமாக இறந்தார்.

மதுரை சிம்மக்கல் பஜனை மடம் சந்து பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 69). இவரது மனைவி வசந்தா.

 கடந்த சில நாட்களுக்கு ராதாகிருஷ்ணனுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

அங்கு அவருக்கு பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.  இதில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. 

இதையடுத்து ராதாகிருஷ்ணன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இருந்தபோதிலும் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி ராதாகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். 


இதுதொடர்பாக திலகர்திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News