உள்ளூர் செய்திகள்
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

வேப்பத்தூரில் விவசாயிகள் சாலை மறியல்

Published On 2022-01-25 10:06 GMT   |   Update On 2022-01-25 10:06 GMT
ஆன்லைன் பதிவை ரத்து செய்யக்கோரி வேப்பத்தூரில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுவாமிமலை:

திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூரில் நெல்கொள்முதல் மையத்தை உடனே திறக்க கோரியும் ஆன்லைன் பதிவை ரத்து செய்யக்கோரியும் வேப்பத்தூர் பேரூராட்சி அ.தி.மு.க செயலாளர் முருகானந்தம் தலைமையில் விவசாயிகள் கும்பகோணம் -பூம்புகார் சாலையில் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த திருவிடைமருதூர் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். 
இந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News