உள்ளூர் செய்திகள்
பரமத்தி அருகே பெற்றோர் வீட்டுக்கு சென்ற மனைவி திரும்பி வராததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகே வசித்து வந்தவர் செந்தில் (வயது 36) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கீதா (30). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொங்கலன்று அவர்களுக்கு இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டது.இதில் கோபமடைந்த கீதா தனது குழந்தைகளுடன் சேலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகே வசித்து வந்தவர் செந்தில் (வயது 36) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கீதா (30). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொங்கலன்று அவர்களுக்கு இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டது.இதில் கோபமடைந்த கீதா தனது குழந்தைகளுடன் சேலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை. இதனால் மனமுடைந்த செந்தில் கடந்த 19-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
அதைப் பார்த்த அவரது உறவினர்கள் செந்திலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அதைப் பார்த்த அவரது உறவினர்கள் செந்திலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செந்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் வீரம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் வீரம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.