உள்ளூர் செய்திகள்
நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தலைகீழாக கவிழ்ந்த கார்

நெடுஞ்சாலையில் தடுப்பு சுவர் மீது மோதி கார் விபத்து

Published On 2022-01-25 09:32 GMT   |   Update On 2022-01-25 09:32 GMT
நெடுஞ்சாலையில் தடுப்பு சுவர், பைக்கில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான காரில் இருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜோலார்பேட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் பகுதியை சேர்ந்தவர் பேட்ரி ஜெயகுமார் (வயது 35) இவருடன் மனைவி மற்றும் குழந்தைகள் உள்பட 5 பேர் நேற்று வேலூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் காரில் வேலூரில் இருந்து பருகூர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
 
அப்போது வாணியம்பாடி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி பங்களாமேடு சூரிய ஓட்டல் அருகில் நந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது ஏறி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளாகி சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்து காரில் பயணம் செய்த குழந்தை உள்பட 5 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். 

இந்த விபத்தில் நாட்டறம்பள்ளி அருகே நாயனசெருவு பகுதியை சேர்ந்த ஆஞ்சிநேயன் என்பவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சு மூலம் அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Tags:    

Similar News