உள்ளூர் செய்திகள்
தற்கொலை முயற்சி

நெல்லையில் ஊர்க்காவல்படை வீரர் தற்கொலை முயற்சி

Published On 2022-01-25 09:16 GMT   |   Update On 2022-01-25 09:16 GMT
நெல்லையில் ஊர்க்காவல்படை வீரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை பழைய பேட்டையை சேர்ந்தவர் இசக்கி(வயது 28). இவருக்கு திருமணமாகி விட்டது. இசக்கி நெல்லை மாநகர ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று திடீரென வீட்டில் பூச்சி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார். உடனே அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேட்டை போலீசார் வழக்குப் பதிவுசெய்து அவரது தற்கொலை முயற்சிக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் சூதாட்டம் விளையாடிய இசக்கி, அதில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News