உள்ளூர் செய்திகள்
ஆறுமுகசாமி ஆணையம்

ஆறுமுகசாமி ஆணைய கால அவகாசம் மேலும் 5 மாதம் நீட்டிப்பு

Published On 2022-01-24 11:46 GMT   |   Update On 2022-01-24 12:24 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 5 மாத கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி உத்தரவிட்டது.
 
தொடர்ந்து சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், பணியாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. இதற்கிடையே, ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட நீட்டிப்பு இன்றுடன் முடிவடைகிறது. 

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 5 மாத கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News