உள்ளூர் செய்திகள்
நாரணபுரம் உபமின் நிலையத்தில் நாளை மின்தடை
கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட நாரணபுரம் உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
சிவகிரி:
கடையநல்லூர் கோட்ட மின் விநியோக பிரிவு செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட நாரணபுரம் உபமின் நிலையத்தில் நாளை (25-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாப் பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழபுதூர், நெல் கட்டும்செவல், சுப்பிர மணியபுரம், உள்ளார்,
வெள்ளானைக்கோட்டை மற்றும் தாருகாபுரம் ஆகிய கிராமங்களில் காலை
9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மேற்படி கிராமங்களில் மின்கம்பிகளில் தொடும் நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.