உள்ளூர் செய்திகள்
கடையநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜூக்கு புகார் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கடைய நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் கடையநல்லூர் பேட்டை மேற்கு மலை பாட்டை சாலை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு நின்ற ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சேக் மைதீன் என்ற ஜுமாக்கான் (வயது 52 ) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து
1 கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.