உள்ளூர் செய்திகள்
ஆவின் பால்

3 வார முழு ஊரடங்கால் தமிழகத்தில் 3 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை பாதிப்பு

Published On 2022-01-24 04:36 GMT   |   Update On 2022-01-24 05:30 GMT
சென்னையில் மட்டும் 70 ஆயிரம் லிட்டர் ஆவின்பால் வினியோகம் பாதித்தது. ஆனால் சனிக்கிழமைகளில் கூடுதலாக விற்பனையாகி உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் ஆவின் பால் நிறுவனம் மூலம் தினமும் 27 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 13.5 லட்சம் லிட்டர் பால் வினியோகிக்கப்படுகிறது.

கொரோனா முழு ஊரடங்கின்போது பால் வினியோகத்திற்கு தடை இல்லை என்றாலும் கடைகள் மூடப்பட்டதால் விற்பனை பாதிக்கப்பட்டது.

கடந்த 3 வார ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தமிழகம் முழுவதும் 3 லட்சம் லிட்டர் பால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு லட்சம் லிட்டர் பால் விற்பனை குறைந்தது.

சென்னையில் மட்டும் 70 ஆயிரம் லிட்டர் ஆவின்பால் வினியோகம் பாதித்தது. ஆனால் சனிக்கிழமைகளில் கூடுதலாக விற்பனையாகி உள்ளது. சென்னையில் வழக்கத்தைவிட கடந்த 3 சனிக்கிழமைகளில் தலா 80 ஆயிரம் லிட்டர்
ஆவின் பால்
விற்பனை அதிகரித்துள்ளது.

அதாவது 14.30 லட்சம் லிட்டர் ஆவின்பால் சனிக்கிழமைகளில் விற்பனையாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக விற்பனையாகி உள்ளது.

சனிக்கிழமைகளில் கூடுதலாக விற்றாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக விற்கப்படும் அளவை விட குறைவாகவே விற்பனை நடந்துள்ளதாக ஆவின் பால் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags:    

Similar News