உள்ளூர் செய்திகள்
முகக்கவசம் அணியாமல் வந்த 25 பேர் மீது வழக்கு
திருத்துறைப்பூண்டியில் முகக்கவசம் அணியாமல் வந்த 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து போலீசார் வாகன
சோதனையில் ஈடுபட்டனர்.
மன்னை ரெயில்வே சாலை அருகில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் நடந்த சோதனையில் முகக்கவசம் அணியாமல் வந்ததாகவும், ஊரடங்கை மீறியதாகவும் கூறி 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த சோதனையில் போக்குவரத்து காவலர்கள் ரமேஷ்குமார்,
உதவி ஆய்வாளர் சிங்காரவேலன் ஆகியோர் ஈடுபட்டனர்.