உள்ளூர் செய்திகள்
100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட பொதுமக்கள்
ஜோலார்பேட்டை அடுத்த பெத்தக்கல்லுப்பள்ளி பகுதியில் 100 சதவீதம் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த சின்னமோட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சியில் நேற்று நடைப்பெற்ற 19-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
அதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி முதல் தவணை போட்டுக் கொண்டனர்.
இதனால் பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சி 100 சதவீதம் இலக்கை எட்டியது பெத்தகல்லுபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மங்கம்மாள் சத்தியமூர்த்திக்கு ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பொறுப்பு டாக்டர் மீனாட்சி பாராட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.