உள்ளூர் செய்திகள்
முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியது
திருப்பத்தூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியது.
திருப்பத்தூர்:
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது இதை கட்டுப்படுத்த அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இதனால் திருப்பத்தூரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
சாலைகள் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
குறிப்பாக எந்த நேரமும் பொதுமக்கள் கூட்டமாக காணப்படும் ஆலங்காயம் மெயின் ரோடு, பஸ் நிலையம், சின்னக்கடைதெரு, பெரிய தெரு, ஆகிய பகுதிகளில்வெறிச்சோடி உள்ளது சாலைகள் பொது மக்கள் நடமாட்டத்தை தடுக்கவும்,
தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து அவ்வழியாக வருபவர்களை விசாரித்து அத்தியாவசிய தேவைக்காக வருபவர்களை செல்ல அனுமதி அளித்தனர்.
தேவையில்லாமல் வாகனங்களில் வந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.அந்த வகையில் திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு, பகுதி ஆசிரியர்நகர் பகுதி ஆலங்காயம்ரோடு, வாணியம்பாடி ரோடு கலெக்டர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
இதற்காக திருப்பத்தூர் நகரப்பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறுகையில்:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கில் உத்தரவை மீறி வாகனங்கள் வெளியே சுற்றிய நபர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளோம் மீண்டும் வெளியே சுற்றினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.
மேலும் இந்த முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்களின் பாதுகாப்புத் தேவைகளை தகவல்கள் மற்றும் பிற இதர பிரச்சினைகள் குறித்து தகவல் தெரிவிக்க விரும்பினால் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை உதவி மையங்கள் தொடர்பு கொள்ளலாம்.
இந்த உதவி மையம் 24 மணி நேரமும் செயல்படும் இந்த தொலைபேசி எண் 9442992526 மாவட்ட எஸ்பி நேரடி மேற்பார்வையில் செயல்படுகிறது என்றார்.