உள்ளூர் செய்திகள்
.

போக்குவரத்து போலீசார் 3 பேருக்கு கொரோனா

Published On 2022-01-23 07:16 GMT   |   Update On 2022-01-23 07:16 GMT
தருமபுரியில் போக்குவரத்து போலீசார் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி:

தருமபுரி நகர போக்குவரத்து காவல் பிரிவில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 3 சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள், 14 போலீசார் பணியாற்றி வருகின்றனர். 

தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் போலீசார் போக்குவரத்து கண்காணிப்புடன் முகக் கவசம் அணியாதவர்கள், மீது வழக்கு பதிவு செய்யும் பணி யிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் 3 போலீசாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனை முடிவில் 3 போலீசாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு அரசு பள்ளி ஆசிரியைகள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 397 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 31,282 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 29,413 பேர் குணமாகி வீட்டுக்கு சென்றனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 281 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News