உள்ளூர் செய்திகள்
திருவிடைமருதூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
திருவிடைமருதூரில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுவாமிமலை:
திருவிடைமருதூர் தாலுகா அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. ஆர்.கே.பாரதிமோகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஏ.வி.கே.அசோக்குமார், கருணாநிதி, முத்துகிருஷ்ணன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து
கொண்டனர்.