உள்ளூர் செய்திகள்
கொள்ளை

திருத்தணி அருகே கோவில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் கொள்ளை

Published On 2022-01-23 03:55 GMT   |   Update On 2022-01-23 03:55 GMT
திருத்தணி அருகே கோவில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட கீழ்பஜார் பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் நேற்று காலை வழக்கம் போல் கோவில் நிர்வாகிகள் கோவிலை திறக்க சென்றனர். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் நடந்த இந்த சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News