உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தந்தை திட்டியதால் வாலிபர் தூக்கிட்டு சாவு

Published On 2022-01-22 10:01 GMT   |   Update On 2022-01-22 10:01 GMT
ஆம்பூர் அருகே தந்தை திட்டியதால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆம்பூர்:

ஆம்பூர் அருகே மாதனூர் ஒன்றியம் கண்ணடி குப்பம் பகுதியை சேர்ந்த சிவகுமார் மகன் அஜித்குமார் (வயது28) என்ற ஷூ கம்பெனி தொழிலாளி. 

நேற்று மாலை இவரது தந்தை வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தது குறித்து கேள்வி கேட்டுள்ளார்.

வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றி வந்தால் எப்படி குடும்பம் நடத்த முடியும் என்று கேட்டதால் இதில் மனம் உடைந்த அஜித்குமார் வீட்டில் தன்னுடைய தாயின் சேலையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆம்பூர் தாலுகா போலீசார் அஜித்குமாரின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News