உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

விழுப்புரம் மாவட்டத்தில் 45 போலீசாருக்கு கொரோனா

Published On 2022-01-22 09:59 GMT   |   Update On 2022-01-22 09:59 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் 45 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தொற்று அதிகமாக உள்ள காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் 45 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரத்தில் கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை 45 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று உள்ள காவலர்கள் அவரவர் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். தொற்று அதிகமாக உள்ள காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று முற்றிலும் குணமடைந்து காவலர் ஒருவர் நாளை பணிக்கு திரும்ப உள்ளார். மேலும் மாவட்டம் முழுவதும் சில காவல் நிலையங்களில் உள்ள போலீசார் உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர்.

Tags:    

Similar News