உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கல்லூரி மாணவன் காதை அறுத்த முதியவர் கைது

Published On 2022-01-22 09:52 GMT   |   Update On 2022-01-22 09:52 GMT
ஜோலார்பேட்டை அருகே கல்லூரி மாணவன் காதை அறுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி, மூக்குத்தி வட்டம் பகுதியை சேர்ந்தவர் குமார் என்பவரின் மகன் விஷ்ணு (வயது19). இவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த 20-ந் தேதி மாலை மூக்குத்தி வட்டம் பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் தனது பைக்கிற்கு பஞ்சர் போட்டு கொண்டு இருந்தார். 

அப்போது அதே பகுதியை சேர்ந்த முனிக்கண்ணு (வயது 53) தனது மொபட்டில் விஷ்ணுவை  இடிப்பது போல் வந்துள்ளார்.  இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த முனிக்கண்ணு தான் வைத்திருந்த கத்தியால் விஷ்ணுவின் இடதுபுற காது, தாடை மற்றும் கழுத்துப் பகுதியில் அறுத்தார். இதில் விஷ்ணு படுகாயமடைந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள்  விஷ்ணுவை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இதுகுறித்து விஷ்ணு கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து முனிக்கண்ணுவை நேற்று கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News