உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ஆண்டிபட்டி அருகே மூதாட்டி உள்பட 3 பேர் தற்கொலை

Published On 2022-01-22 08:35 GMT   |   Update On 2022-01-22 08:35 GMT
ஆண்டிபட்டி அருகே மூதாட்டி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி அருகே சோலைத்தேவன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜன் மனைவி கோலம்மாள் (வயது60). இவர்களது மகன்கள் மற்றும் மகள் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனர்.

கோலம்மாளுக்கு ரத்த கொதிப்பு நோய் இருந்து வந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் சம்பவத்தன்று விஷத்தை குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆண்டிபட்டி அருகே நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் சரவணக்குமார் (43). மது பழக்கத்திற்கு அடிமையானதால் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சரவணக்குமார் பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆண்டிபட்டி அருகே கன்னியபிள்ளைபட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ் (62). இவருக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் பாலமுருகனுடன் வசித்து வந்தார். அடிக்கடி கால் வலி ஏற்பட்டது.

பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த சுப்புராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராஜதானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News