உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

பெண் தொழிலாளி தற்கொலை

Published On 2022-01-22 07:51 GMT   |   Update On 2022-01-22 07:51 GMT
வேலை செய்து கொண்டிருந்த போது மயங்கி விழுந்த பெண் சாவு
திருச்சி :
திருச்சி சோமரசம் பேட்டை சுன்னாம்புக்காரபட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது40). இவரது மனைவி விஜயலெட்சுமி (38) இவர் விவசாய வேலை மற்றும் கட்டிட வேலை செய்துவந்தார்.

இந்நிலையில் விஜயலெட்சுமி பிராட்டியூர் அருகே கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தார்.  இதனை பார்த்த  உடன் வேலை செய்தவர்கள், விஜயலட்சுமியை தூக்கி விசாரித்தனர். அப்போது அவர், நான் வீட்டிலிருந்து வரும் பொழுது அரளி விதையை அறைத்து சாப்பிட்டு விட்டேன் என அழுது கொண்டே கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக விஜயலெட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக விஜயலட்சுமி உயிரிழந்தார். 
பின்னர் இது குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News