உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

கும்மிடிப்பூண்டி போலீஸ் உட்கோட்டத்தில் 12 போலீசாருக்கு கொரோனா

Published On 2022-01-22 04:17 GMT   |   Update On 2022-01-22 04:17 GMT
கும்மிடிப்பூண்டி போலீஸ் உட்கோட்டத்தில் 12 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 2 உயர் அதிகாரிகளும் அடங்குவர்.
கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி போலீஸ் உட்கோட்டத்தில் கும்மிடிப்பூண்டி, சிப்காட், கவரைப்பேட்டை, ஆரம்பாக்கம், பாதிரிவேடு ஆகிய 5 போலீஸ் நிலையங்கள் அடங்கும்.

இங்கு பணிபுரியும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் 12 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 2 உயர் அதிகாரிகளும் அடங்குவர்.

இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி, சிப்காட், கவரைப்பேட்டை, ஆரம்பாக்கம் மற்றும் பாதிரிவேடு ஆகிய போலீஸ் நிலையங்களின் வாசலில் முழுமையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. மேலும் தினசரி வரும் புகார் மனுக்களை அவசியம் கருதி போலீஸ் நிலையங்களுக்கு வெளியே வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News