உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை

Published On 2022-01-21 09:42 GMT   |   Update On 2022-01-21 09:42 GMT
களக்காடு அருகே கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை, பண்டிதன் குறிச்சியை சேர்ந்தவர் நயினார் (வயது 71). 

இவர் கடந்த 5 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அதிக மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததால் அவர் மன விரக்தியுடன் காணப்பட்டார். 

இந்நிலையில் நேற்று மாலை கீழப்பத்தை பெரியகுளத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் குளிக்க செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்ற நயினார் கால்வாய் அருகே உள்ள சண்முகம் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதுபற்றி அவரது மகன் சேதுராமன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News