உள்ளூர் செய்திகள்
முகக்கவசம் அணிந்தால் மட்டுமே மது விற்பனை- நெல்லையில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
நெல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் முககவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது விற்கப்படுகிறதா? என அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நெல்லை:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுக்கடைகளில் மது வாங்குபவர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.
நெல்லை மாவட்டத்திலும் டாஸ்மாக் மேலாளரின் உத்தரவின்பேரில் அனைத்து மதுக்கடைகளுக்கும் இந்த உத்தரவு குறித்து அறிவுறுத் தப்பட்டது. ஆனாலும் சில கடைகளில் இந்த உத்தரவு முறையாக கடை பிடிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஒருவாரமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அசுர வேகத்தில் உயர்ந்து வருவதால் டாஸ்மாக் கடைகளில் முக கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே மது விற்கப்படுவதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
மாவட்டத்தில் இன்று அனைத்து கடைகளிலும் முகக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே மது பாட்டில் வழங்கப்பட்டது. பாளை மகாராஜா நகரில் உள்ள கடையில் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முக கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் திரும்ப அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கூறுகையில், அரசின் உத்தரவின் பேரில் பொங்கல் பண்டிகைக்கு முன்பே முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது வழங்கவேண்டும் என்ற சுற்றறிக்கையை அனைத்து கடைகளுக்கும் வழங்கியுள்ளேன்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 69 கடைகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள 96 கடைகள் என மொத்தம் உள்ள 165 டாஸ்மாக் கடைகளிலும் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மது கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது தொற்று பாதிப்பு உயர்ந்து வருவதால் இதனை கட்டாயமாக்க உத்தரவிட்டுள்ளோம். இதனால் அனைத்து மதுக்கடைகளுக்கும் முக கவசம் அணிந்து வந்த மது பிரியர்களுக்கு மட்டும் மதுபாட்டில்கள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுக்கடைகளில் மது வாங்குபவர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.
நெல்லை மாவட்டத்திலும் டாஸ்மாக் மேலாளரின் உத்தரவின்பேரில் அனைத்து மதுக்கடைகளுக்கும் இந்த உத்தரவு குறித்து அறிவுறுத் தப்பட்டது. ஆனாலும் சில கடைகளில் இந்த உத்தரவு முறையாக கடை பிடிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஒருவாரமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அசுர வேகத்தில் உயர்ந்து வருவதால் டாஸ்மாக் கடைகளில் முக கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே மது விற்கப்படுவதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
மாவட்டத்தில் இன்று அனைத்து கடைகளிலும் முகக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே மது பாட்டில் வழங்கப்பட்டது. பாளை மகாராஜா நகரில் உள்ள கடையில் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முக கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் திரும்ப அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கூறுகையில், அரசின் உத்தரவின் பேரில் பொங்கல் பண்டிகைக்கு முன்பே முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது வழங்கவேண்டும் என்ற சுற்றறிக்கையை அனைத்து கடைகளுக்கும் வழங்கியுள்ளேன்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 69 கடைகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள 96 கடைகள் என மொத்தம் உள்ள 165 டாஸ்மாக் கடைகளிலும் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மது கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது தொற்று பாதிப்பு உயர்ந்து வருவதால் இதனை கட்டாயமாக்க உத்தரவிட்டுள்ளோம். இதனால் அனைத்து மதுக்கடைகளுக்கும் முக கவசம் அணிந்து வந்த மது பிரியர்களுக்கு மட்டும் மதுபாட்டில்கள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.