உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்த தொழிலாளி

Published On 2022-01-20 09:55 GMT   |   Update On 2022-01-20 09:55 GMT
கல்லிடைக்குறிச்சி அருகே காட்டுப்பகுதியில் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லிடைக்குறிச்சி:


கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் சுடலை(வயது 46). கூலி தொழிலாளி. இவருக்கு பிரியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரியா தனது மகன்களுடன் வீரவநல்லூர் அருகே உள்ள காருக்குறிச்சியில் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் பொட்டலில் இருந்து மூலச்சி-செம்பத்திமேடு செல்லும் சாலையில் உள்ள பனங்காடு பகுதியில் சுடலை வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார். உடல்  அருகே மோட்டார் சைக்கிளும்  நின்று கொண்டிருந்தது.

இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து கல்லிடைக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுடலை உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, குடும்பத்தை பிரிந்து வாழ்ந்த ஏக்கத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News