உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

சேவல் சண்டை நடத்திய சகோதரர்கள் உள்பட 4 பேர் கைது

Published On 2022-01-20 07:51 GMT   |   Update On 2022-01-20 07:51 GMT
சேவல் சண்டை நடத்திய சகோதரர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்:

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகேயுள்ள எலவனூர் அரசுப்பள்ளி அருகேயுள்ள முள்காட்டில் பணம் வைத்து பந்தயம் கட்டி சேவல் சண்டை நடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து சின்ன தாராபுரம் போலீசார் அப்பகுதியில்    சோதனை நடத்தினர்.

அப்போது அப்பகுதியில் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த புஞ்சை காளகுறிச்சி வெங்கக்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளியப்பன் மகன்கள் அருண் (22), செல்வன் (33), கார் வழியைச் சேர்ந்த அதே பகுதியைச் சேர்ந்த செல்வன் (33), அதே பகுதியைச் சேர்ந்த அண்ணா துரை (28), கார் வழியைச் சேர்ந்த சண்முகம் (27) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களை கைது செய்த போலீசார் 2 சேவல்கள், ரூ.200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News