உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.

பி.எஸ்.என்.எல். பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-01-19 10:51 GMT   |   Update On 2022-01-19 10:51 GMT
நலிவடைந்து வரும் பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
பல்லடம்:

பல்லடம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு டி.ஒய்.எப்.ஐ. சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பி.எஸ்.என்.எல்.லில் 4 ஜி, 5 ஜி சேவையை அமல்படுத்த வேண்டும்.  

மற்ற தனியார் நிறுவனங்களில் அந்த சேவைகள் செயல்படுத்தி வரும் நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மட்டும் காலம் தாழ்த்தி வருவதை கண்டிப்பது, நலிவடைந்து வரும் பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . 

இதில் அந்த சங்கத்தின் ஒன்றிய தலைவர் முருகேசன் தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News